உள்ளூர் செய்திகள்
சிங்காநல்லூர் அருகே உல்லாசத்திற்கு மறுத்த திருநங்கைக்கு கத்திக்குத்து
போலீசார் வழக்குபதிவு செய்து மேகநாதன் மற்றும் பூபாலனை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை சூலூர் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் 33 வயது திருநங்கை. இவர் நேற்று தனது சக திருநங்கைகளுடன் திருச்சி ரோடு காமாட்சிபுரம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது 33 வயது திருநங்கைக்கு ஏற்கனவே பழக்கமான டாஸ்மாக்கில் உள்ள பாரில் ஊழியர்களாக பணிபுரியும் மேகநாதன்(23), பூபாலன்(27) என்பவர்கள் அங்கு நின்று இருந்தனர். அவர்கள் திருநங்கையிடம் பேச்சு கொடுத்தனர். மேலும் உல்லாசமாக இருக்க திருநங்கையை அழைத்தனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மேகநாதன் மற்றும் பூபாலன் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருநங்கையின் கழுத்து மற்றும் தோள் பட்டையில் சரமாரியாக குத்தினர்.
அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதைப் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் வருவதை பார்த்த 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கத்தி குத்தில் காயம் அடைந்த திருநங்கையை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையடுத்து திருநங்கை சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய 2 பேரையும் தேடினர். இந்த நிலையில் அந்த பகுதியில் பதுங்கியிருந்த மேகநாதன் மற்றும் பூபாலனை போலீசார் கைது செய்தனர்.