உள்ளூர் செய்திகள்
அன்னதானப்பட்டியில் பெண் மாயமானார்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி பாண்டு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் . மேரேஜ் டெக்கரேஷன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா ( வயது 29).
இவர் கடந்த மாதம் 21- ந் தேதி தனது மகனை பள்ளியில் விட அழைத்துச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி–யும் எங்கும் அவர் கிடைக்க–வில்லை.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.