உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் அருகே உள்ள கல்வெட்டு மேட்டு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் காரையூர் தமிழ்நம்பி, கண்டவராயன்பட்டி சோமசுந்தரம் ஆகியோரின் ஏற்பாட்டில் மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், நகரச் செயலாளர் கார்த்திகேயன், திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன், துணை சேர்மன் காண் முகமது முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மஞ்சுவிரட்டுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட மகளிரணி பவானி, நகர இளைஞரணி அமைப்பாளர் பஷீர் அகமது, இளைஞரணி துணை அமைப்பாளர்களான ஜான், முத்துக்குமார், பழக்கடை அபுதாஹீர், மனோகரன், மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.