உள்ளூர் செய்திகள்
அபராதம்

அகவிலைப்படி உயர்வை வழங்காவிட்டால் 10 மடங்கு அபராதம்

Published On 2022-04-30 16:02 IST   |   Update On 2022-04-30 16:02:00 IST
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காவிட்டால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை

சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குறைந்தபட்ச ஊதியச்சட்டத்தின்படி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியா ளர்களுக்கு 1.4.2022முதல் வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு சென்னை தொழிலாளர் ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு பல்வேறு தொழில்களுக்கு நிர்ணயித்துள்ள அடிப்படை ஊதியத்துடன் வழங்க வேண்டும்.

மேலும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஏப்ரல் 2022 மாதம் முதல் வழங்கப்பட வேண்டும்.கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,507 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,708 ஆகமொத்தம் ரூ.10,205 வழங்கப்பட வேண்டும்.

ஓட்டல் மற்றும் ரெஸ்டா ரண்ட்டில் பணிபுரியும் சப்ளையர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.6,127 மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.6,708 ஆக மொத்தம் ரூ.12,835 வழங்கப்பட வேண்டும்.

செக்யூரிட்டி கார்டு களுக்கு அடிப்படை  ஊதியம் ரூ.7,996 மற்றும் உயர்ந்தப்பட்ட அக விலைப்படி ரூ.6,554 ஆக மொத்தம் ரூ.14,550 வழங்கப்பட வேண்டும்.

பொது மோட்டார் போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,118, அகவிலைப்படி ரூ.7,678 ஆக        மொத்தம் ரூ.16, 796-மும், நடத்துனர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,907, அகவிலைப்படி ரூ.7,678 ஆக மொத்தம் ரூ.16,585-மும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று செங்கல் சூளை ,சினிமா தியேட்டர்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், மருத்துவமனையில் பணி புரியும் தொழிலாளர்கள், அரிசி ஆலை போன்ற 72 வகையான தொழில்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும்.

இந்த        அகவிலைப்படி    1.4 . 2022 முதல் நடைமுறைக்கு வருகிறது. மேற்குறிப்பிட்ட தொழில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அகவிலைப்படியை அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு அரசால் நிர்ண யிக்கப்பட்டுள்ள அடிப்படையில் சேர்த்து வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படாத நிறுவனங்கள் மீது  குறைந்தபட்சக் கூலி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரை இணை ஆணையர் முன்பு சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் மூலம் கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பணியாளர்களுக்கு தர வேண்டிய வித்தியாச தொகை தொழிலா ளர்களுக்கு பெற்று வழங்கப்படும்.

மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது 10 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்)  சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மேதினத்தன்று (1.5 .2002)   கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.  

இந்த தினத்தில்  விடுமுறை அளிக்காமல் ஊழியர்களை வேலை செய்ய அனுமதித்தால் அவர்களுக்கு வேலை அளிப்பவர்கள் இரட்டிப்பு சம்பளம் மற்றும் வேறு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News