உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டையில் ரசாயன வாகன விபத்து தடுப்பு பயிற்சி

Published On 2022-04-30 15:15 IST   |   Update On 2022-04-30 15:15:00 IST
ராணிப்பேட்டையில் ரசாயன வாகன விபத்துகளை தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மங்களூர் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளால், பென்சீன் போன்ற ரசாயனங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளானால் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடத்தப்பட்டது.

பென்சீன் என்ற ரசாயனம் தண்ணீரைவிட அடர்த்திக் குறைவானதாகவும், எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மையுடன் இருக்கின்ற காரணத்தினால் விபத்து ஏற்பட்டவுடனேயே இந்த ரசாயனத்தை உடனடியாக பம்ப்செய்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

தீ விபத்து நேரிடும்பட்சத்தில் இதனை அணைக்க 3 வகையான தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தண்ணீரினை பயன்படுத்தக்கூடாது.

இந்த சூழ்நிலையைக் கையாள்வதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ரசாயனங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் எந்த வகையான ரசாயனம் உள்ளது என தெரியப்ப டுத்தும் விபரங்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். 

விபத்து நேரிடும்போது 100 மீட்டர் தொலைவிற்கு முன்பாக தடுப்பரண் அமைக்கப்பட வேண்டும்.நீர்நிலைகளில் இந்தரசாயனம் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர்.குமரேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News