உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

சத்தியமங்கலம் அருகே இன்று காலை விபத்து- 2 வாலிபர்கள் பலி

Published On 2022-04-30 10:42 IST   |   Update On 2022-04-30 10:42:00 IST
சத்தியமங்கலம் அருகே இன்று காலை விபத்தில் 2 வாலிபர்களை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்தவர் அஜித் (23). அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் (23). இவர்கள் 2 பேரும் மேலும் 4 நண்பர்களுடன் கிருஷ்ணகிரியில் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் கோவை மாட்டத்தில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவுக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர்.

அவர்கள் இன்று காலை 7.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி ஒரு பிக்கப் வேன் வந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அருண், அஜித் வந்த மோட்டார் சைக்கிள் மீது வேன் பயங்கரமாக மோதியது.

இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே நண்பர்கள் கண் முன்னால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை பார்த்த நண்பர்கள் கதறி அழுதனர். மேலும் இது பற்றி தெரிய வந்நததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிக்கப்வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News