உள்ளூர் செய்திகள்
செம்முனீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலம் சென்ற போது எடுத்த படம்.

பூசாரியூர் செம்முனீஸ்வரர் கோவில் திருவிழா

Published On 2022-04-29 15:16 IST   |   Update On 2022-04-29 15:16:00 IST
அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம்.

இந்த வருட திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றப்பட்டு பூச்சாட்டு விழா தொடங்கியது. 25-ந் தேதி ஆயக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து 28-ந் தேதி சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து செம்முனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. 

இன்று காலை சுமார் 11 மணி அளவில் மடப்பள்ளியில் இருந்து செம்முனீஸ்வரர், மன்னாதசாமி, பச்சியம்மன் ஆகிய தெய்வங்களின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஊர்வலமாக வனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் அங்குள்ள சாமி சிலைகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கார ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து வனக் கோவிலிருந்து பூசாரி மற்றும் பக்தர்கள் புடைசூழ குட்டி பாறை எனும் இடத்திற்கு சென்று பூசாரி ஆட்டுக்கிடாய்க்கு பூஜை செய்து தீர்த்தம் தெளிப்பார். ஆடு துளுக்கிய பின் முறைதாரர்களால் முதல் கிடாய் வெட்டப்படும். 

அதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனுக்காக கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள்  ஒவ்வொன்றாக வெட்டி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு செம்மு னீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் நாளை செம்மு னீஸ்வரர் வனக் கோவிலில் இருந்து மடபள்ளிக்கு ஊர்வலமாக எடுத்து செல்வர். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Similar News