உள்ளூர் செய்திகள்
விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்
பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த மனைவியை, கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 47). இவரது மனைவி சுதா (40). கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் சில காலம் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இதற்கிடையே அவர்கள் தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டி பெரம்பலூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் விசாரணைக்காக சுதா மற்றும் காமராஜ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது நீதிமன்ற நுழைவாயிலில் எதிர்பாராதவிதமாக காமராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாவை சராமரியாக உடலில் பல இடங்களில் குத்தினார்.
இது கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அழகேசன் காமராஜை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. மேலும் காமராஜூம் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக மற்றவர்கள் அவர்களை மீட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சுதாவை அருகிலுள்ள வழக்கறிஞர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த காமராஜ், போலீஸ்காரர் அழகேசன் ஆகியோரும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் சுரேஷ் (66), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுரேஷ், ராஜேஸ்வரியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி கோர்ட்டில் தனக்கு தன்னுடைய கணவர் தன்னை கவனித்துக் கொள்ள பணம் தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கானது ராஜேஸ்வரிக்கு சாதகமாக முடிந்தது.
அப்போது சுரேஷ் ராஜேஸ்வரி குறிப்பிட்ட தொகையை காசோலை மூலமாக வழங்குவதாக ஒப்புதல் அளித்து காசோலை வழங்கியுள்ளார். ஆனால் அது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் மீண்டும் ராஜேஸ்வரி சுரேஷ் மீது நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அது சம்பந்தமாக கடந்த 26ந்தேதி திருச்சி நீதிமன்றத்திற்கு ராஜேஸ்வரி வந்து விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது திருச்சி அரசு மருத்துவமனை அருகே அதிக ஆத்திரத்தில் இருந்த சுரேஷ் புதிய அரிவாளால் தன் மனைவி என்று கூட பாராமல் 7 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
இதனால் ராஜேஸ்வரி நிலைதடுமாறி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை முயற்சி செய்யும் வகையில் 7 இடங்களில் அரிவாளால் வெட்டிய ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 47). இவரது மனைவி சுதா (40). கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் சில காலம் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இதற்கிடையே அவர்கள் தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டி பெரம்பலூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் விசாரணைக்காக சுதா மற்றும் காமராஜ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது நீதிமன்ற நுழைவாயிலில் எதிர்பாராதவிதமாக காமராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாவை சராமரியாக உடலில் பல இடங்களில் குத்தினார்.
இது கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அழகேசன் காமராஜை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. மேலும் காமராஜூம் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக மற்றவர்கள் அவர்களை மீட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சுதாவை அருகிலுள்ள வழக்கறிஞர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த காமராஜ், போலீஸ்காரர் அழகேசன் ஆகியோரும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் சுரேஷ் (66), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுரேஷ், ராஜேஸ்வரியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி கோர்ட்டில் தனக்கு தன்னுடைய கணவர் தன்னை கவனித்துக் கொள்ள பணம் தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கானது ராஜேஸ்வரிக்கு சாதகமாக முடிந்தது.
அப்போது சுரேஷ் ராஜேஸ்வரி குறிப்பிட்ட தொகையை காசோலை மூலமாக வழங்குவதாக ஒப்புதல் அளித்து காசோலை வழங்கியுள்ளார். ஆனால் அது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் மீண்டும் ராஜேஸ்வரி சுரேஷ் மீது நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அது சம்பந்தமாக கடந்த 26ந்தேதி திருச்சி நீதிமன்றத்திற்கு ராஜேஸ்வரி வந்து விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது திருச்சி அரசு மருத்துவமனை அருகே அதிக ஆத்திரத்தில் இருந்த சுரேஷ் புதிய அரிவாளால் தன் மனைவி என்று கூட பாராமல் 7 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
இதனால் ராஜேஸ்வரி நிலைதடுமாறி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை முயற்சி செய்யும் வகையில் 7 இடங்களில் அரிவாளால் வெட்டிய ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.