உள்ளூர் செய்திகள்
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் திடீர் மரணம்

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் திடீர் மரணம்

Published On 2022-04-28 17:01 IST   |   Update On 2022-04-28 17:01:00 IST
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான பூனேக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக இருந்தவர் அருண்குமார் பாதுரி (வயது 65). நேற்று இரவு வீட்டில் இருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி துறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அருண்குமார் பாதுரி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான பூனேக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.

Similar News