உள்ளூர் செய்திகள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை
கலந்தாய்வு மூலம் பணியிடங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பள்ளிக்கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் கலந்தாய்வு மூலம் தேவையான பணி யிடங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி, முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்க மாநில தலைவர் மகேந்திரன், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொரு ளாளர் துரைராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, பள்ளிக்க ல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் கலந்தாய்வு மூலமாக தேவை பணியிட ங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 35 நாட்களை கடந்தும் மாத ஊதியம் இது நாள் வரை வழங்கப்படவில்லை.
இது குறித்து நிர்வாகத்தை தொடர்ந்து நேரிலும், தெலைபேசி வாயிலாகவும் மற்றும் கடிதம் மூலமாக மாத ஊதியம் பெறுவதற்கு பணியிடங்களை தோற்று வித்த அரசாணைகள் அனைத்தையும் அச்செய லியில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே சாத்தி யம் என்கின்றனர்.
எனவே மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்திடுவதில் உள்ள இடர்பாட்டை விரைந்து களைந்து இந்த மாத ஊதியமும், பெற இயலாத பட்சத்தில் இரண்டு மாதமாக ஊதியமின்றி தங்களுக்கான தேவைகளை நிறைவேற்ற இயலாது தடுமாற்றத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பெற்றிட வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தனர்.
பள்ளிக்கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் கலந்தாய்வு மூலம் தேவையான பணி யிடங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி, முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்க மாநில தலைவர் மகேந்திரன், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொரு ளாளர் துரைராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, பள்ளிக்க ல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் கலந்தாய்வு மூலமாக தேவை பணியிட ங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 35 நாட்களை கடந்தும் மாத ஊதியம் இது நாள் வரை வழங்கப்படவில்லை.
இது குறித்து நிர்வாகத்தை தொடர்ந்து நேரிலும், தெலைபேசி வாயிலாகவும் மற்றும் கடிதம் மூலமாக மாத ஊதியம் பெறுவதற்கு பணியிடங்களை தோற்று வித்த அரசாணைகள் அனைத்தையும் அச்செய லியில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே சாத்தி யம் என்கின்றனர்.
எனவே மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்திடுவதில் உள்ள இடர்பாட்டை விரைந்து களைந்து இந்த மாத ஊதியமும், பெற இயலாத பட்சத்தில் இரண்டு மாதமாக ஊதியமின்றி தங்களுக்கான தேவைகளை நிறைவேற்ற இயலாது தடுமாற்றத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பெற்றிட வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தனர்.