உள்ளூர் செய்திகள்
முகாம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

Published On 2022-04-27 18:27 IST   |   Update On 2022-04-27 18:27:00 IST
மானாமதுரையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அனுசூயா மஹாலில் நாளை (28ந்தேதி) காலை 10 மணியளவில், வட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது. 

இலவச வீட்டுமனைபட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிகடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்பஅட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் இதர கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட உள்ளது. பொதுமக்கள்  இந்தமுகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Similar News