உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

கொடுக்கல், வாங்கல் தகராறில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-04-27 08:55 GMT   |   Update On 2022-04-27 08:55 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கொடுக்கல், வாங்கல் தகராறில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி செல்வி (வயது 28). அதே ஊரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி பிரியா (42). செல்விக்கும், பிரியாவுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண விவகாரம் தொடர்பாக செல்விக்கும், பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று செல்வி அதே ஊரில் உள்ள தனது உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பிரியாவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரியா தான் வைத்திருந்த அரிவாளால் செல்வியின் இடது கையில் வெட்டினார்.

இதில் காயமடைந்த செல்வி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து சங்கராபுரம் போலீசில் செல்வி புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் பிரியா மீது வழக்குப்பதிவு செய்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News