உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

அண்ணமார் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2022-04-27 11:33 IST   |   Update On 2022-04-27 11:33:00 IST
அரசு நிலத்தில் கட்டியுள்ள கோவிலை அப்புறப்படுத்த வேண்டுமென, அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவினாசி:

அவிநாசி தாலுகா, பெருமாநல்லூர் அருகே மேற்குபதி கிராமத்துக்கு உட்பட்டது, ராமச்சந்திராபுரம். 

அங்கு வசிக்கும் மக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னதாக அண்ணமார் சுவாமி கோவில் கட்டினர். இதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் அரசு நிலத்தில் கட்டியுள்ள கோவிலை அப்புறப்படுத்த வேண்டுமென, அதிகாரிகள் கூறுகின்றனர். 

நீண்ட நாட்களாக காவல் தெய்வமாக வழிபாடு நடத்தப்படும் அண்ணமார் கோவிலுக்கு நிலத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News