உள்ளூர் செய்திகள்
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஆக்கிரமிப்பு- ஏரியை ஆழப்படுத்தக்கோரி மனு
முடியனூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 28 ஹெக்டேர் (சுமார் 70 ஏக்கர்) பரப்பளவிலான ஏரியில் தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.முடியனூர் கிராம விவசாயிகள் கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.முடியனூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 28 ஹெக்டேர் (சுமார் 70 ஏக்கர்) பரப்பளவிலான ஏரியில் தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ஏரிக்கரையில் வீடுகளும் கட்டி உள்ளனர். இதனால் ஏரியின் நீர்ப்பிடிப்பு அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
எனவே மாவட்ட கலெக்டர் டி.முடியனூர் கிராமத்திலுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியை நேரில் வந்து பார்வையிட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ஏரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள முட்புதர்களையும் அகற்றி அதிக அளவு நீர் பிடிக்கும் வகையில் ஏரியை ஆழப்படுத்தி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு செய்வதன் மூலம் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேற்கண்டவாறு அந்த கோரிக்கை மனுவில் விவசாயிகள் கூறியுள்ளனர்.
திருக்கோவிலூர் அருகேயுள்ள டி.முடியனூர் கிராம விவசாயிகள் கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.முடியனூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 28 ஹெக்டேர் (சுமார் 70 ஏக்கர்) பரப்பளவிலான ஏரியில் தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ஏரிக்கரையில் வீடுகளும் கட்டி உள்ளனர். இதனால் ஏரியின் நீர்ப்பிடிப்பு அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
எனவே மாவட்ட கலெக்டர் டி.முடியனூர் கிராமத்திலுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியை நேரில் வந்து பார்வையிட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ஏரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள முட்புதர்களையும் அகற்றி அதிக அளவு நீர் பிடிக்கும் வகையில் ஏரியை ஆழப்படுத்தி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு செய்வதன் மூலம் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேற்கண்டவாறு அந்த கோரிக்கை மனுவில் விவசாயிகள் கூறியுள்ளனர்.