உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் தேங்கும் அவலம்

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஏ.கே.டி. நகர் பகுதியில் கழிவுநீர் தேங்கும் அவலம்

Published On 2022-04-25 15:45 IST   |   Update On 2022-04-25 15:45:00 IST
நீர்த்தேக்க தொட்டியில் பயன்படுத்தப்பட்டு வீணாகும் நீர் அதே பகுதியில் பள்ளம் அமைத்து அதனை சுற்றி உரைகள் அமைக்கப்பட்டு மூடி போட்டு மூடப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.கே.டி நகர் உள்ளது. இங்கு தியாகதுருகம் சாலை அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைத்து, மினி நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பயன்படுத்திவந்தனர்.

இந்நிலையில் நீர்த்தேக்க தொட்டியில் பயன்படுத்தப்பட்டு வீணாகும் நீர் அதே பகுதியில் பள்ளம் அமைத்து அதனை சுற்றி உரைகள் அமைக்கப்பட்டு மூடி போட்டு மூடப்பட்டிருந்தது. ஆனால் இந்த பள்ளம் தற்போது தூர்ந்து போனதால் கழிவுநீர் செல்ல வழியின்றி மினி நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறு மற்றும் அதன் அருகே உள்ள கழிவு நீர் பள்ளம் ஆகிய பகுதிகளில் குளம்போல தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக விளங்குவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்து, தூர்ந்து போன கழிவுநீர் பள்ளத்தை சரி செய்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Similar News