உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் ஒன்றியத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரம்
தியாகதுருகத்தில் உள்ள பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்த கட்டிடங்கள் குறித்த விபரங்கள் கல்வித்துறை அதிகாரியிடமிருந்து பெறப்பட்டன.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 42 பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி தியாகதுருகத்தில் உள்ள பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.
இந்த பணியை வார்டு கவுன்சிலர் சிலம்பரசன் பார்வையிட்டார். இதேபோல் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட தொரசலூர், பல்லகச்சேரி, பிரிதிவிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ளபழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்த கட்டிடங்கள் குறித்த விபரங்கள் கல்வித்துறை அதிகாரியிடமிருந்து பெறப்பட்டன.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 42 பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி தியாகதுருகத்தில் உள்ள பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.
இந்த பணியை வார்டு கவுன்சிலர் சிலம்பரசன் பார்வையிட்டார். இதேபோல் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட தொரசலூர், பல்லகச்சேரி, பிரிதிவிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ளபழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.