உள்ளூர் செய்திகள்
பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி அவசியம்

Published On 2022-04-25 15:03 IST   |   Update On 2022-04-25 15:03:00 IST
சிவகங்கையில் இந்தியன் ஆயில் எரிசக்தி சேமிப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சிவகங்கை

சிவகங்கையில் இந்தியன் ஆயில் எரிசக்தி சேமிப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  செந்தில்குமார் இதனை தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஆரோக்கியமாக வாழ நடைபயிற்சி முக்கியம் என்றார்.  150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். 

சிவகங்கைநகர் பகுதி முழுவதும் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள் நடந்து செல்வதால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற கோஷம் எழுப்பி சென்றனர். 

மேலும் விழிப்புணர்வு துண்டுபிரசுரமும் வழங்கினர்.  நாம் நமது செயற்பாடுகளின் மூலம் எல்லா துறைகளிலும் கனிமவளங்களையும் மற்றும் பெட்ரோலியப் பொருட்களையும் தொடர்ந்து சேமிப்பதற்கான பல முயற்சிகளை கடைபிடிப்போம். இதன்மூலம் நமதுநாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த கனிமவளங்கள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். 

கனிமவளங்கள் மற்றும் பொருட்களை வீணாக பயன்படுத்துவதை உபயோகித்து தவிர்க்கவும், சுற்றுச் சூழலைப் துய்மையான எரிபொருளை பாதுகாக்க வும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதி மொழி எடுத்துக் கொண் டனர். இதில் இந்தியன் ஆயில் விற்பனை அதிகாரி தினேஷ் மற்றும் விற்பனை நிலையங்கள் உரிமையாளர்கள் பாபு கொங்கேஷ்வரன் அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News