உள்ளூர் செய்திகள்
சட்டசபையில் முக கவசம் கட்டாயம் ஆனது
முதல்-அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சென்னை:
கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் சூழலில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயமாகி உள்ளது. தலைமைச் செயலகத்துக்கு வரும் ஊழியர்கள், சட்டசபைக்கு வருபவர்கள் இதுவரை முக கவசம் அணியாமல் வந்து சென்றனர். ஒரு சிலர் மட்டுமே முககவசம் அணிந்தனர்.
ஆனால் இன்று முதல்-அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று சட்டசபைக்குள் அமர்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக கவசம் அணிந்திருந்தார். இதேபோல் சட்டசபைக்கு வருபவர்களுக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டன.
கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் சூழலில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயமாகி உள்ளது. தலைமைச் செயலகத்துக்கு வரும் ஊழியர்கள், சட்டசபைக்கு வருபவர்கள் இதுவரை முக கவசம் அணியாமல் வந்து சென்றனர். ஒரு சிலர் மட்டுமே முககவசம் அணிந்தனர்.
ஆனால் இன்று முதல்-அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று சட்டசபைக்குள் அமர்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக கவசம் அணிந்திருந்தார். இதேபோல் சட்டசபைக்கு வருபவர்களுக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டன.