உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி நூலகத்தில் உலக புத்தக தின விழா நடை பெற்ற போது எடுத்த படம்

ஆலங்குடியில் உலக புத்தக தினவிழா

Published On 2022-04-24 12:51 IST   |   Update On 2022-04-24 12:51:00 IST
ஆலங்குடி நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. விழாவிற்கு உலக புத்தக தினம் வாசகர் வட்ட தலைவர்  பாபுஜான்  தலைமை வகித்தார்.

வாசகர் வட்ட பொருளாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர்  ரமாராமநாதன் மற்றும்

ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

விழாவில் பள்ளி மாணவிகள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.

Similar News