உள்ளூர் செய்திகள்
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம் பணி நியமன ஆணையை வழங்கினார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 111 பேருக்கு பணி ஆணை

Published On 2022-04-22 16:38 IST   |   Update On 2022-04-22 16:38:00 IST
வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட111 பேருக்கு யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம்பணி நியமன ஆணையை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கள்ளக்குறிச்சி யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்பயிற்சி, டிப்ளமோ, பட்டதாரிகள் உள்ளிட்ட 245 பேர் பங்கேற்றனர்.

முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட111 பேருக்கு யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம்பணி நியமன ஆணையை வழங்கினார்.

அப்போது மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வாணியந்தல் ஆறுமுகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பார்வதி, ஒன்றிய கவுன்சிலர்கள் தேவராஜ், கரிகாலன், மணிவேல், வாழ்வாதார இயக்கம் மேலாளர் சதீஷ்குமார், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மனோகரன், இளநிலை உதவியாளர் ரஞ்சித்குமார், சுவாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News