உள்ளூர் செய்திகள்
புத்தக திருவிழா.

புத்தக திருவிழா

Published On 2022-04-22 15:03 IST   |   Update On 2022-04-22 15:03:00 IST
சிவகங்கை புத்தக திருவிழாவில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நூல்களை நகராட்சி நிர்வாகம் வாங்கியது.
சிவகங்கை

சிவவகங்கை நகர் மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் சி.எம். துரைஆனந்த், ஆணையாளர், பாலசுப்பிர மணியன் பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் இணைந்து ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கினர்.

இந்த புத்தகங்களை நகராட்சி அலுவலகத்தில் தனிஅறையில் நூலகம் அமைத்து நகராட்சிக்கு வரும் பொதுமக்கள் புத்தகங்களை படித்து மகிழ்ந்திட ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கவுன்சிலர்கள் சண்முகராஜன், ராமதாஸ், கார்த்திகேயன், அயூப்கான், சரவணன், விஜயகுமார், கிருஷ்ணகுமார், மகேஷ் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News