உள்ளூர் செய்திகள்
.

குமாரபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

Published On 2022-04-21 06:09 GMT   |   Update On 2022-04-21 06:09 GMT
குமாரபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்:

குமாரபாளையம் தெற்கு காலனியில் வசிப்பவர் நாகராஜன் (வயது 56). இவர் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் மருந்து கடை வைத்துள்ளார். 

நேற்று இவரது கடைக்கு வந்த  பெராந்தர்காடு பகுதியை சேர்ந்த சர்க்கரை கார்த்தி (37) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, நாகராஜன் பாக்கெட்டில் இருந்த ரூ.1250&யை பறித்துக்-கொண்டு ஓட முயன்றார்.

உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை பிடிக்க முயற்சித்தனர். அவர்களையும் கத்தியால் குத்தி விடுவேன் என்று மிரட்டியவாறு அங்கிருந்து சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதிக்கு ஓடி விட்டார். 


இது குறித்து  நாகராஜன் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்தி (எ) சர்க்கரை கார்த்தியை  மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Tags:    

Similar News