உள்ளூர் செய்திகள்
காரைக்குடியில் நாளை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.
காரைக்குடி
காரைக்குடி தாலுகா கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் நாளை (21ந்தேதி) காலை 10 மணிக்கு வட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இலவச வீட்டுமனைபட்டா, பல்வேறு திட்டங்களில் உதவித்தொகை பெறுதல், குடும்பஅட்டை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு முகாமில் தீர்வு காணப்படும் என்பதால் பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.