உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தீத்தொண்டு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-04-20 15:27 IST   |   Update On 2022-04-20 15:27:00 IST
தீத்தொண்டு வர இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் தீயணைப்-புத்துறை சார்பில் தீத்தொண்டு வாரத்தை-யொட்டி இருசக்கர வாகன விழிப்-புணர்வு பிரச்சார பேரணி மற்றும் விழிப்-புணர்வு நிகழ்ச்சி ஆகியன நடந்தது.

நீத்தார் நினைவு நாளை-யொட்டி தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடந்த 14&ந்தேதி முதல் இன்று வரை கடை-பிடிக்கப் படுகிறது. இந்த நாட்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படை-வீரர்கள் ஈடுபட்டு வரு-கின்றனர்.

இதன்படி பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் முன்பு நடந்த இருசக்கர வாகன விழிப்-புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட தீய-னைப்பு அலுவலர் அம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று தீயணைப்பு படை வீரர்கள் நகரில் முக்கிய பகுதிகள் வழியாக சென்று விழிப்-புணர்வை ஏற்படுத்தினர். 

மேலும் பொது-மக்களிடம் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிலைய அலுவலர் உதய-குமார் மற்றும் தீயனைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News