உள்ளூர் செய்திகள்
காரைக்குடி அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் அருகே உள்ள சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் புவனேசு வரி. இவரது மகள் சுகன்யா(வயது28).
மனநிலை பாதித்த சுகன்யா கடந்த 16-ந்தேதி சுதந்திரபுரம் அருகே புளியங்குடியிருப்பு கோவில் திரு விழாவில் நடந்த அன்னதானத்தில் சாப்பிடச்சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
மாயமான அவரை தேடி வந்தநிலையில் சுதந்திரபுரம் பகுதியில் உள்ள முந்திரிக்காட்டில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சுகன்யாவை கற்பழித்து கொன்ற கொலையாளி யார்? என்று கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
கொலையாளியை கண்டுபிடிக்க சிவகங்கை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் காரைக்குடி துணை போலீஸ்சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சுகன்யாவை கற்பழித்து கொன்றது அவரது பக்கத்து வீட்டு வாலிபரான தேவா(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.