உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

4 வாகனங்கள் சிறைப்பிடிப்பு

Published On 2022-04-19 09:38 GMT   |   Update On 2022-04-19 09:38 GMT
ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 வாகனங்ள் சிறைபிடிக்கப்பட்டது.
சீர்காழி:

மயிலாடுதுறை வட்டாரபோக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், விஸ்வநாதன் ஆகியோர் கடந்த 13-ம் தேதி முதல் 17&ம் தேதி வரை சிறப்பு விடுமுறை

நாட்களில் சீர்காழி புறவழிச்சாலையில் வாகனதணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது 48 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.1லட்சத்து73ஆயிரத்து500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. 

அதேபோல் சாலை வரி ரூ.1லட்சத்து 24ஆயிரத்து 470 வசூலிக்கப்பட்டது.

வாகனதணிக்கையின் போது விதிமுறைகள் மீறல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அபராதமாக ரூ.1லட்சத்து37ஆயிரத்து100 விதிக்கப்பட்டது. 

வாகன தணிக்கையின்போது முறையாக ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.
Tags:    

Similar News