உள்ளூர் செய்திகள்
நூலக அறிவுசார் மையத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.

நூலக அறிவுசார் மையம்

Published On 2022-04-18 16:17 IST   |   Update On 2022-04-18 16:17:00 IST
திருப்பத்தூரில் நூலக அறிவுசார் மையம் அமைப்பதற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1.95 கோடி மதிப்பீட்டில் நூலகம் அறிவுசார் மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா, திருப்பத் தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, துணைத்தலைவர்  கான் முகமது, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சி யர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, பேரூராட்சி உறுப்பினர்கள் கண்ணன், சரவணன், பசீர்அகமது, பிளாசா ராஜேஸ்வரி சேகர், சாந்தி சோமசுந்தரம், சரண்யா ஹரி, நாகமீனாள்.

திருஞானசம்பந்தம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவரும், கவுன்சிலருமான சீனிவாசன், திருப்பத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதய சண்முகம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு காளிமுத்து, பேச்சாளர் ஷாஜகான், கட்டிட ஒப்பந்ததாரர் இளங்கோ, உலக ஒருங்கிணைந்த மத நல்லிணக்க குழு தலைவர் ரபீக், ஆசிரியர் பாண்டியன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் தலைமை எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Similar News