உள்ளூர் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலியானார்.
கரூர் :
கரூர் மாவட்டம், கே பரமத்தி ஒன்றியம், சின்ன தாராபுரம் அருகே மல்லா நத்தம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் (வயது82) விவசாயி. இவர் பணி நிமித்தமாக தனது சைக்கிளில் தாராபுரம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
நேரு நகர் பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ரங்கன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கன் உடலை கைப்பற்றி பிரேத பரி-சோதனைக்-காக அரவக்-குறிச்சி அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியானது குறித்து சின்ன-தாரா-புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு-கின்றனர்.
கரூர் மாவட்டம், கே பரமத்தி ஒன்றியம், சின்ன தாராபுரம் அருகே மல்லா நத்தம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் (வயது82) விவசாயி. இவர் பணி நிமித்தமாக தனது சைக்கிளில் தாராபுரம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
நேரு நகர் பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ரங்கன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கன் உடலை கைப்பற்றி பிரேத பரி-சோதனைக்-காக அரவக்-குறிச்சி அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியானது குறித்து சின்ன-தாரா-புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு-கின்றனர்.