உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மேலப்பாளையத்தில் அரசு பஸ் டிரைவர் மயங்கி விழுந்து சாவு

Published On 2022-04-18 15:45 IST   |   Update On 2022-04-18 15:45:00 IST
பாபநாசத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பணிக்கு வரும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
நெல்லை:

பாபநாசம் அருகே உள்ள பொதிகையடி பொன் பெருமாள் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55).

இவர் நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இன்று காலை பணிக்காக அரசு பஸ்சில் பாபநாசத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

மேலப்பாளையம் பகுதியில் இறங்கி நடந்து வரும்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News