உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வெவ்வேறு சம்பவங்களில் முதியவர், வாலிபர் பலி

Published On 2022-04-18 15:39 IST   |   Update On 2022-04-18 15:39:00 IST
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவர், வாலிபர் பலியாகினர்.
திருச்சி:

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், ஊட்டத்தூர் கிராமம் அம்மன் காலனியை சேர்ந்தவர் சிவகுமார். (வயது 24). இவர் நேற்று இரவு தனது  மோட்டார் சைக்கிளில் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

சிறுகனூர் பி.கே.அகரம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார் சைக்கிளில் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருச்சி பிச்சாண்டார் கோவில் ரயில்வே தண்டவாளம் அருகே சுமார் (70 வயது). மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக திருச்சி ரெயில் நிலைய போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த நபர் வெள்ளை நிற வேஷ்டியும், நீல நிற சட்டையும் அணிந்திருந்தார்.  அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் ரயில் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News