உள்ளூர் செய்திகள்
ஆலங்குளத்தில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

ஆலங்குளத்தில் காமராஜர் சிலை அமைப்பது குறித்து சபாநாயகர் ஆய்வு

Published On 2022-04-18 15:31 IST   |   Update On 2022-04-18 15:31:00 IST
ஆலங்குளத்தில் காமராஜர் சிலை அமைப்பது குறித்து சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார்.
ஆலங்குளம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் நடைபெற்ற கபடி போட்டியை  சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவருக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையிலான கட்சியினர் ஆலங்குளத்தில் வரவேற்பு அளித்தனர்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலையினால் காமராஜர் சிலை அகற்றப்படும் நிலையில் உள்ளது. எனவே காமராஜர் சிலைக்கு மாற்று இடம் தேர்வு செய்து நிறுவ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனை கேட்ட சபாநாயகர் அப்பாவு பஸ் நிலையம் கீழ்புறம் உள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது நகர செயலாளர் நெல்சன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனிதுரை, மாவட்ட வர்த்தக அணி கணேஷ் பாண்டியன் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News