உள்ளூர் செய்திகள்
நெல்லிக்குப்பம் நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர். பின்னர் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலையோரத்தில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அப்போது நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி இளநிலை உதவியாளர் பாபு மற்றும் சுய உதவி குழு பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.