உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆம்பூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-04-16 15:42 IST   |   Update On 2022-04-16 15:42:00 IST
ஆம்பூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த துளசிராமன் (வயது27) கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானார். 

சம்பவத்தன்று துளசிராமன் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு அறையில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். 

இதைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் அங்கு வந்த போலீசார் துளசிராமன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News