உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

போளூரில் கார்- லாரி மோதிய விபத்தில் கிரிவலம் சென்று திரும்பிய டிரைவர் பலி

Published On 2022-04-16 15:20 IST   |   Update On 2022-04-16 15:20:00 IST
போளூரில் கார்- லாரி மோதிய விபத்தில் கிரிவலம் சென்று திரும்பிய டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
போளூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேலப்பட்டு பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சேகர் (வயது 68), காவேரி (65), ராம்பிரகாஷ் (28), மோகனப்பிரியா (26). இவர்கள் அனைவரும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல காரில் சென்றனர். 

காரை ரமேஷ் என்பவர் ஓட்டினார். கிரிவலம் சென்று விட்டு மீண்டும் திருவண்ணாமலையிலிருந்து வேலூர் நோக்கி வந்தனர். அப்போது வெண்மணி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த 2 பேரை போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதுகுறித்து போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News