உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
கடந்த 13&ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரவேணு:
கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது.
முதல் நாள் பால்குட ஊர்வலம் நடந்தது. 3&வது நாளான இன்று காலை மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 108 விளக்கு பூஜையும் நடந்தது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.