உள்ளூர் செய்திகள்
கைது

சங்கராபுரம் அருகே சாராயம்-மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

Published On 2022-04-16 14:40 IST   |   Update On 2022-04-16 14:40:00 IST
சங்கராபுரம் அருகே சாராயம்-மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கராபுரம்:

சங்கராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், கொசப்பாடி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில், சாராயம் விற்ற காலனி பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். 

இதே போன்று பூட்டை ரோடில் மது பாட்டில் விற்ற சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஹரி(28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News