உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இணையதளம் மூலமாக ஆயுள் சான்று பெற வசதி

Published On 2022-04-15 06:27 GMT   |   Update On 2022-04-15 06:27 GMT
ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஆயுள் சான்றை அலுவலகத்தில் அளித்த பிறகே தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் பதிவு பெற்று 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஆயுள் சான்றை அலுவலகத்தில் அளித்த பிறகே தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆயுள் சான்றை இணையவழியாக சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பென்ஷனர் லைப் சர்டிபிகேட் என்பதை தேர்வு செய்து தங்களது பதிவு எண் மற்றும் செல்போன் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு பெறப்படும் கடவு சொல்லை கொண்டு உள்ளே சென்று சுயவிவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆதார் எண், ரேஷன் கார்டு எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதிய ஆணை எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஆவணங்களையும் அசலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்த தகவல் தேவைப்படுவோர் 0421- 2477276 என்ன தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் சமூக பாதுகாப்பு திட்டம் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News