உள்ளூர் செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-14 15:52 IST   |   Update On 2022-04-14 15:52:00 IST
திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:

நீர்நிலைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்ற கோரிய உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருமருகல் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, இளைஞர்

மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ், கட்சியின் ஒன்றிய பொரு-ளாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News