உள்ளூர் செய்திகள்
சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.

சிங்கார வேலவர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

Published On 2022-04-14 10:20 GMT   |   Update On 2022-04-14 10:20 GMT
சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் குரு பரிகார தளமாக விளங்கும் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தியே குரு பகவானாக தனி சன்னதியில் அமையப்பெற்று

 அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கக்-கூடிய இந்த கோவிலில் இன்று அதிகாலை 4.16 மணி அளவில் குரு பெயர்ச்சி விழா

நடைபெற்றது. கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்தார்.முன்னதாக குருபகவா--னுக்கு பால், சந்தனம், பன்னீர் பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து குரு பகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்-னிட்டு திரளான பக்தர்-கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News