உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

Published On 2022-04-14 15:40 IST   |   Update On 2022-04-14 15:40:00 IST
டி.என்.பாளையம் அருகே பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அருகே பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 டி.என்.பாளையம் அருகே உள்ள  கொண்டையம் பாளையம் சம்பன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர் சம்பவத்தன்று  கொண்டையம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொன்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கொண்டையம் பாளையம் புதுக்காலனி இந்திரா நகரை சேர்ந்த பஞ்சயப்பன் (24) என்பவர் ரமேஷிடம் செலவுக்கு 500 ரூபாய் பணம் கேட்டு உள்ளார். அதற்கு ரமேஷ் மறுத்துள்ளார்.

உடனே பணம் கொடுக்க மறுத்த ரமேசை பஞ்சயப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500 எடுத்து சென்று விட்டதாக கூறப்ப டுகிறது.

இச்சம்பவம் குறித்து ரமேஷ் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஞ்சயப்பனை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News