உள்ளூர் செய்திகள்
மருதேப்பள்ளியில் எருது விடும் திருவிழா
கிருஷ்ணகிரி அருகே மருதேப்பள்ளியில் எருது விடும் திருவிழா நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள மருதேப்பள்ளி கிராமத்தில் நேற்று எருதுவிடும் திருவிழா நடந்தது. இதில், திருவண் ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 200&க்கும் மேற்பட்ட காளை களைக் கொண்டு வந்திருந்தனர்.
காளைகளை குறிப்பிட்ட தூரம் ஓடவிட்டு, அந்த தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு பரிசு வழங்கப்பட்டது.
அதன்படி, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2&ம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.55 ஆயிரம் என மொத்தம் 55 பரிசுகள் வழங்கப்பட்டன-. முன்னதாக கால்நடை மருத்துவர்கள் காளை களை பரிசோதனை செய்த பிறகு விழாவிற்கு அனுமதித்தனர். இதையொட்டி கந்திகுப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையில், இந்திய விலங்குகள் நலவாரியம் மற்றும் ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழுவின் உறுப்பினர் மிட்டல், எருது விடும் விழாவை ஆய்வு செய்தார்.