உள்ளூர் செய்திகள்
பழைய மின்கம்பிகளை அகற்றிய போது எடுத்த படம்.

பழைய மின் கம்பிகள் அகற்றம்: பொதுமக்கள் பாராட்டு

Published On 2022-04-14 10:51 IST   |   Update On 2022-04-14 10:51:00 IST
குறைந்த மின் அழுத்த புகாரில் சோலைநகரில் பழைய மின் கம்பிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து தி.மு.க.வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:

புதுவை முத்தியால் பேட்டை சோலை நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட  வீடுகளில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இதனை சீரமைத்து தருமாறு தி.மு.க. பொது மக்கள் சேவை மையம் நிர்வாகி மதன் பாபுவிடம் சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க. நிர்வாகி மதன்பாபு மின்துறை அதிகாரிகளை நேரில் புகார் செய்தார். புகாரையடுத்து அந்த பகுதியில் உள்ள பழைய மின் கம்பிகள் அகற்றப்பட்டு புதிய மின் கம்பிகள் மாற்றப்பட்டன இதனால் குறைந்த மின் அழுத்தம் சீரமைக்-கப்பட்டது.

மின் துறை அதிகாரிகளுக்கு மதன்பாபு தலைமையில் தொகுதி செயலாளர் சவுரிராஜன், முன்னாள் கவுன்சிலர் ரவி, பார்த்திபன், ஸ்ரீகாந்த், கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.  மேலும் தி.மு.க.வினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Similar News