உள்ளூர் செய்திகள்
பாண்லே பாலகத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

பாண்லே பாலகம் திறப்பு

Published On 2022-04-14 10:47 IST   |   Update On 2022-04-14 10:47:00 IST
குருவி நத்தத்தில் பாண்லே பாலகத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புதுச்சேரி:

குருவிநத்தம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், குருவிநத்தம் தூக்கு பாலம் சந்திப்பில், புதியதாக பாண்லே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பால் வள அபிவிருத்தி அதிகாரி டாக்டர் குமரன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி பாலகத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் தவமுருகன், பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முன்னதாக குருவிநத்தம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் நாராயணமூர்த்தி வரவேற்றார். இயக்குனர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், குருவிநத்தம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க இயக்குனர்கள் அரிக்-கிருஷ்ணன், பாலசுப்பிர-மணியன், அழகம்மாள், பரிபூரணம், தனலட்சுமி, குப்புசாமி, சந்தானம் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News