உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

கடற்கரையில் வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடு

Published On 2022-04-12 14:27 IST   |   Update On 2022-04-12 14:27:00 IST
கடற்கரை திருவிழாவையொட்டி வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

கடற்கரை திருவிழாவையொட்டி வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுவையில் 16-ந்தேதி மாலை வரை கடற்கரை திருவிழா கடற்கரை சாலையில் கொண்டாடப்-பட உள்ளது.

விழாவில் புதுவை மக்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி கடற்கரை திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களின் நலனுக்காக போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்-பட்டுள்ளது. இதுகுறித்து வடக்கு- கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை கடற்கரை  விழாவிற்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை பழைய துறைமுகம் பகுதியில் மட்டும் நிறுத்த வேண்டும். அங்கிருந்து அவர்கள் நடந்து விழாவிற்கு செல்ல வேண்டும். கடற்கரை திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை செயின்ட் லூயிஸ் வீதி, துமாஸ் வீதி ஆகிய வீதிகளில் மற்றும் பிரமோனட் ஓட்டல் அருகே வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் புதிய தற்காலிக ஏற்பாட்டை பின்பற்றி விழாவில் பாதுகாப்புடன் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் உடனிருந்தார்.

Similar News