உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்க அரசு உத்தரவு

Published On 2022-04-12 13:21 IST   |   Update On 2022-04-12 13:21:00 IST
பெருந்துறை வட்டார பகுதிக்கு புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பெருந்துறை:

பெருந்துறை வட்டார பகுதிக்கு புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க  அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பெருந்துறை பகுதி வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு சிப்காட் மற்றும் ஏராளமான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெருந்துறை பகுதியில் ஏராளமான வெளி மாநிலத்தவர்கள் குடியேறியதால் இந்த பகுதியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால் போக்குவரத்து நெரிசலும் டவுன் பகுதிகள் அடிக்கடி ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பெருந்துறைக்கு தனியாக போக்குவரத்து காவல் அலுவலகம் திறக்கப்பட்டு தற்பொழுது போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பெருந்துறை பகுதிகள் பெண்களுக்கான குற்றங்கள் அதிகம் நடைபெற்று வருவதால் இது சம்பந்தமான புகார்கள் பவானி மற்றும் ஈரோட்டிற்கு மாற்றி அனுப்பப்பட்டது.

இதனால் பெருந்துறை பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான குற்ற புகார்கள் இங்கேயே விசாரணை மேற் கொள்ளலாம் என பல தரப்பினரும் கேட்டுக் கொண்டதற் கிணங்க அரசு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் திறக்கப்படும் என இப்பகுதி மக்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Similar News