உள்ளூர் செய்திகள்
சாக்கடையில் விழுந்த குதிரை மீட்பு
அந்தியூர் பகுதியில் சாக்கடையில் விழுந்த குதிரையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் சாக்கடையில் விழுந்த குதிரையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
அந்தியூர் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் சாக்கடை கட்டும் பணி நடைபெற்று கொண்டு இருப்பதால் கழிவுநீர் சரிவர செல்லாமல் தேங்கி இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சாலையோரம் சுற்றித் திரியும் குதிரை ஒன்று அந்த கால்வாயில் விழுந்து மேலே ஏற முடியாமல் தவித்து கொண்டு இருந்தது. இதை கண்ட பொதுமக்கள் அந்தியூர் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் கொடுத்தனர்
இதையடுத்து அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த குதிரையை கயிறு கட்டி பொதுமக்கள் உதவி யுடன் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.