உள்ளூர் செய்திகள்
டாக்டர் வீட்டில் பணம்-நகை கொள்ளை
ஈரோட்டில் டாக்டர் வீட்டில் பணம்-நகை கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் டாக்டர் வீட்டில் பணம்-நகை கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு திண்டல் சத்யசாய் நகரை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 65). ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்ட ராக பணியாற்றி வருகிறார். ஞானசேகரன் தனது குடும்ப த்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
இந்நிலையில் டாக்டர் ஞானசேகரன் தனது குடும்பத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் பீரோ வில் வைக்கப் பட்டிருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் திருட்டு போய் இருந்தது. மர்ம நபர்கள் யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஞானசேகரன் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த குமார் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைகள் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவின் காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்கையும், ரிசீவர் பாக்சையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர் களும் சம்பவ இடத்திற்கு வந்து பதிவாகியிருந்த கை ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகளை அடிப் படையாக கொண்டு விசா ரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். நன்கு பழக்கமான நபர்கள் தான் இந்த துணிகர கொள் ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக் கின்றனர்.