உள்ளூர் செய்திகள்
கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது- ஓம்சக்தி சேகர் பேச்சு
சசிகலாவை நீக்கியது செல்லும் கோர்ட்டு தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பேசினார்.
புதுச்சேரி:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் லெனின் வீதி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் அ.தி.-மு.க.வினர் பட்டாசு வெடித்து தொண்டர்-களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ஓம்சக்திசேகர் பேசியதாவது:&
அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெய-லலிதா மட்டுமே. வேறு யாருக்கும் அந்த பதவி கிடையாது என்று முதலில் வலியுறுத்தியது நான்தான். இதனால் சசிகலாவால் கட்சியை விட்டு முதலில் நீக்கபட்டவன் நான்தான்.
ஆனால், இப்போது நீதிமன்றமே சசிகலா நியமனம் செல்லாது என்று தெரிவித்து இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும். அ.தி.மு.க. என்னும் இரும்பு கோட்டை ஜெயலலிதா வழியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்படும். இதுவே தொண்டர்களின் எண்ணமும் ஆகும்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் காசிநாதன், மாநில துணை செயலாளர் கணேசன், தொகுதி செயலாளர்கள் வெங்கடேசன், கமல்தாஸ், கோபால், வேலவன் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் முருகன் தம்பா, அறிவு, சுரேஷ்பாபு, நாக லோகநாதன், அய்யனார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.