உள்ளூர் செய்திகள்
எருதாட்ட விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சி.

சூளகிரி அருகே எருது விடும் விழா

Published On 2022-04-11 16:28 IST   |   Update On 2022-04-11 16:28:00 IST
சூளகிரி அருகே எருது விடும் விழா நடைபெற்றது.

சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், - சூளகிரி தாலுகா- காமன்தொட்டி அருகே தாசன்புரம் எருது விடும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, கோபசந்திரம், புக்காசாகரம், அட்டகுறுக்கி, டோரிப்பள்ளி, கானல்லட்டி, அத்திமுகம், சூளகிரி பேரிகை, பாத்தகோட்டா, உத்தனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டன. இந்த எருதுவிடும் விழாவில் 500 மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு எருதுகளை அடக்கினர்.

இந்த நிகழ்ச்சியை அனைத்து கிராமத்தில் இருந்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த எருதாட்டத்தை பேரிகை சூளகிரி காவல் நிலையத்தை சார்ந்த காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News