உள்ளூர் செய்திகள்
.

வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது

Published On 2022-04-11 16:05 IST   |   Update On 2022-04-11 16:05:00 IST
வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது ஆற்றில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக  சிகரமாகனபள்ளி கிராமத்தை சேர்ந்த  சுரேஷ் (வயது40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Similar News